Hot Posts

6/recent/ticker-posts

குதிரை பலம் வேண்டுமா..? ஆண்மை பெருக்கும் அற்புத விதை பற்றி தெரியுமா?




பூனைக்காலி விதை நம்மில் அதிகம் புழக்கத்தில் இல்லாத ஒருவகை காய், இன்னைக்கு நாம சாப்பிடுற மொச்சை மாதிரியான பயிர்தான். ஆனா, கொடிவகைக் காய்கறிகள்ல பூனைக் காலி அளவுக்கு மகத்துவம் உள்ளது எதுவும் இல்லை. பூனைக்காலி பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது. பூனைக்காலி விதையை நன்றாக உலர வைத்து சூரணம் செய்து  கொண்டு ஐநூறு மி.கிராம் ஆயிரம் மி.கிராம் அளவு வரை தினந்தோறும் காலை, மாலை இருவேளை பாலில் அருந்தி வர, மேக நோய்கள் நீங்குவதோடு  ஆண்மை பெருகும்.

பூனைக் காலி விதை, சுக்கு, திப்பிலி மூலம், கிராம்பு, கருவாப்பட்டை, வெண் சித்திர மூலம் வேர்ப்பட்டை, பூனைக்கண் குங்கிலியம் இவைகளை குறிப்பிட்ட  அளவு எடுத்து சூரணம் செய்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து, மிளகளவு மாத்திரைகளாக உருட்டிக் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்  காலை, மாலை இரு வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர வயிற்றுப்புழு, குன்மம், மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.

அஸ்வகந்தா செக்ஸ் வாழ்க்கைக்கு எப்படி மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கிறது? https://podhigaiherbs.blogspot.com/2021/09/benifits-of-ashwaganda-in-tamil.html

பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை இவற்றுடன் தண்ணீர் விட்டான் கிழங்கு, முள் இலவு, நெல்லி இவைகளின் வேரையும் எடுத்து, உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். சீந்தில் சர்க்கரை, கற்கண்டு, மேற்கண்ட பொடி இவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு ஒன்றாக க்கலந்து அதிலிருந்து ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வீதம் நெய்யுடன் கலந்து காலை, மாலை இருவேளை உண்டு வர ஆண்மை பெருகும்.

தாம்பத்யம் சிறக்க உதவும் ‘கன்றுக்குட்டிப் புல்’ என்ற கானா வாழை

பூனைக்காலி விதை தேள் கடிக்கு, சிறந்த மருந்தாக்ப் பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் பூனைக்காலியானது பல சூரணங்களிலும் லேகியங்களிலும்  சேர்க்கப்படுகிறது.

1. நிலப் பனங்கிழங்கு

2. தண்ணீர்விட்டான் கிழங்கு

3. இலவம் பிசின்

4. நெருஞ்சில் விதை

5. நீர்முள்ளி விதை

6. பெரும் பூனைக்காலி விதை

7. பனங்கற்கண்டு 

சூரணம் செய்முறை:

பனங்கற்கண்டை தவிர மேற்கண்ட அனைத்து பொருள்களையும் வெள்ளை நிற காட்டன் துணியில் சுற்றி, ஆவியில் வேக வைக்க வேண்டும். ஒரு 20 நிமிடம் கழித்து வெளியில் எடுத்து, மற்றொரு ஈரமில்லாத துணியில் போட்டு, வீட்டுக்குள்ளேயே நிழலிலேயே நன்கு உலர்த்தி, பின் பனங்கற்கண்டையும் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தேன் அல்லது நெய்யில் ஒரு ஸ்பூன் அளவு குழைத்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். குதிரை மாதிரி பலம் பெறுவீர்கள்.

பூனைக்காலி விதை பொடி செய்யும் முறை

பூனைக்காலி விதைகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து பின்னர் அதனை சிறிது நேரம் லேசாக வறுக்க வேண்டும். அப்படி வறுத்தால் தான் பூனைக்காலி விதையின் மேல் இருக்கும் ஓட்டினை நீக்க முடியும்.

இவ்வாறு ஓடு நீக்கிய பின் கிடைக்கும் பூனைக்காலி விதையின் பருப்பினை பாலில் சிறிது நேரம் வேகவைத்து பின்னர் நன்றாக உலர வைக்க வேண்டும். நன்றாக உலர்ந்த பின்னர் பொடியாக்க வேண்டும்.

பூனைக்காலி விதை எங்கு கிடைக்கும்

பூனைக்காலி விதை பொடி மற்றும் பூனைக்காலி விதை சாதாரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நமது பொதிகைஇனையதளத்திலும் கிடைக்கிறது எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்.

நீங்கள் பூனைக்காலி விதையினை வாங்கியும் உங்கள் தேவைக்கு ஏற்ப பொடியாக்கி கொள்ள முடியும்.

எவ்வாறு பூனைக்காலி விதை பொடி தயாரிப்பது என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.



 

குங்கிலியத்தின் மகிமையை நம்மில் எத்தனை பேர் அறிவோம்


 


கருத்துரையிடுக

0 கருத்துகள்