Friday, January 6, 2023

சர்க்கரையின் அளவை சரிசெய்ய உதவும் பன்னீர் பூ !!

 

சர்க்கரையின் அளவை சரிசெய்ய உதவும் பன்னீர் பூ !!



பன்னீர் பூ பார்ப்பதற்கு சுண்டைக்காய் போல் இருக்கும், இந்த பன்னீர் பூவானது சொலனேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஆயுர்வேத பயன்பாட்டில் இதன்  பங்கு அதிகம் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள இந்த பன்னீர் பூ  எளிதாக மூலிகை கடைகளில் கிடைக்க கூடியது. நாட்டு மருந்து கடைகளில் பன்னீர் பூ கால் கிலோ வாங்கி கொள்ளுங்கள். இரவில் தூங்கும் முன் ஐந்து பூ எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த பூ உள்ள தண்ணீரை வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். பின் வடிகட்டிய அந்த தண்ணீரை அருந்த வேண்டும். இதே போன்று பத்து நாட்கள் தினமும் காலையில் அருந்த வேண்டும். நீங்கள் பத்து நாட்கள் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு சர்க்கரையின் அளவு சரியான அளவு வந்து குணம் அடைவீர்கள்.

பன்னீர் பூ கணையத்தில் உள்ள பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் பயன் பாட்டை சரி செய்கிறது. இது பீட்டா செல்களை சரி செய்வது மட்டுமல்லாமல், இன்சுலின் சுரப்பதற்கும் உதவுகிறது. மேலும் டைப் -2 நீரிழிவானது இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பன்னீர் பூவானது இயற்கை மருந்தாக செய்லபடுகிறது.

தினமும் இரவில் ஊற வைத்து காலையில் ஊறிய காயை வடிகட்டியில் வடித்து அந்நீரை வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாக குறைந்து விடும். நீங்கள் இதை சாப்பிட ஆரம்பித்ததும் மாதம் ஒரு முறை இரத்த பரிசோதனை செய்துக்கொள்ளலாம்பொதிகை இணையத்தில் தரமான சுத்தமான பன்னீர் பூக்களை மக்களுக்கு அளிக்கிறோம்

Friday, May 6, 2022

மூட்டு வலிக்கு முடக்கற்றான்... உடல் மெலிய முடக்கற்றான்!!

முடக்கற்றான்



முடக்குகளை அறுப்பதால் ”முடக்கறுத்தான்” என்று பெயராகி அது மருவி  ’முடக்கற்றான் ‘, ’ முடக்கத்தான் ’ என்று ஆகிவிட்டது. சங்க இலக்கியங்களில் பேசப்படு ஊழிஞைத் தினைக்குரிய ;ஊழிஞை’ முடக்கற்றன் ஆகும். இன்றலவும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளிலும், கேரளா மாநிலத்திலும் முடக்கற்றான் கொடி ’ஊழிஞை’ என்றே அழைக்கப்படுகிறது. இது போல் நிறைய மூலிகைகளின் பெயர்கள் கேரளாவில் தமிழ்சங்க  இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள பெயர்களாலேயே அழைக்கப்படுவது வியப்பான விசயமாகும். 

முடக்கற்றான் அவித்து விழிந்து சாறு எடுத்து, அதனுடன் உப்பு, மிளகு சேர்த்து  ரசம்  செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இந்த ரசத்தை வாரம் இரண்டு முறை உண்டு வந்தால் வாய்வு கலையும், மலச்சிக்கல், வாதவலி ஆகியவை குணமாகும்.

Read More: கரிசலாங்கண்ணியில் இவ்வளவு அற்புத சக்தியா....

வாத நாராயணன், தழுதாலை, முடக்கற்றான் ஆகிய மூன்று மூலிகைகளுக்கும் வாதத்தை குனமாக்கும் பன்புகளும், மலமிளக்கும் பன்புகள் உள்ளது.

Read More: இது இருந்தா போதும் உங்களுக்கு சர்க்கரை வியாதியே வராது…! 8 /40

உடல் மெலிய முடக்கற்றான்


முடக்கற்றான் இலைகளைப் பச்சரிசி மாவுடன் சேர்த்து அரைத்து, அடையாகச் சமைத்து சாபிட்டு வந்தால் உடல் வலி தீரும். உடல் பருத்தவர்கள் இதைச் சாப்பிட்டால், கெட்ட நீர் வெளியேர் உடல் மெலியும். முடக்கற்றான் இலைகளை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து காலை, மாலை உணவுக்குப் பிறகு 1 தேக்கரனடியளவு மூன்று மாதங்கள் சப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகள் சரியாகும்.

குறைவான மாதவிடாய், அதிக வலியுடன் கூடிய மாதவிடாய்க் காலங்களில் முடக்கற்றான் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்டினால் குணமாகும், அதோடு உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடையும்.

முடக்கற்றான் இலைசாற்றுடன் சம் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துத் தைலமாகக் காய்ச்சி, காதுகளில் விட்டு வந்தால் காது வலி காதுகளில் சீழ் வடிதல் ஆகியவை குணமாகும். முடக்கற்றான் இலைகளை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி வாத வலி கண்ட இடங்கள், மூட்டு வீக்கங்களில் ஒற்றடம் கொடுத்து வந்தால் குணமாகும்.

முடக்கற்றான் இலைகளைக் கொடியுடன் பிடுங்கி ஒரு கையளவு எடுத்து உரலில்போட்டு இடித்து, அதனுடன் 5 வெள்ளைப் பூண்டு பல்,10கிராம் மிளகு, 600 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி 150 மில்லியாக சுண்டும் வரை வைத்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நன்கு பேதியாகும். அதோடு வாய்வு மலச்சிக்கல், உடல் வலி , மூட்டு வீக்கம் ஆகியவை நீங்கும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் குடிக்க வேண்டும். Benefits of Balloon Vine Leaves


முடக்கற்றான் வேரை ஒரு கைப்பிடியளவு எடுத்து உரலில் போட்டு இடித்து, 600 மில்லி தண்ணீர் சேர்த்து 200 மில்லி வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை இரு வேளைகளிலும் 100மில்லி அள்வு குடித்து வர தீராத வியாதி குணமாகும்.

அனைத்து இயற்கை மூலிகைகளையும் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டியவை. நம் பொதிகை இனையதளத்தில் ஆன்லைன் மூலம் எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம். தொடர்புக்கு 7200931131 / 9840494462 

#முடக்கற்றான் #BenefitsofBalloonVineLeaves #podhigaiherbs #mudakatranpayankal #herbalonline #podhigaifoods #podhigaiherbs

Tuesday, April 26, 2022

சோற்றுக்கற்றாழை! மகளிர் பிணித் தீர்க்கும் மாமருந்து!


சோப்பு, ஷாம்பு, அழகு கிரீம்கள் போன்ற பொருட்களில் பலவற்றில் ”ஆலோவேரா” சேர்க்கப்பட்டது என்று விளம்பரப்படுத்துவதைப் பார்த்திருப்போம். இந்த ஆலோவேராதான் சோற்றுக்கற்றாழை. தமிழ் மருத்துவத்தில் மிகவும் இன்றியமையாத மூலிகை. இது குமரிப் பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீக்கும் மூலிகையாக இருப்பதால், இதற்க்கு ”குமரி” என்று பெயரிட்டுள்ளனர் சித்தர்கள். அந்தளவுக்கு மருத்துவக் குணங்கள் இருந்தாலும் இதில் கவனிக்க வேண்டிய விசயம்.. சோற்றுக்கற்றாழையை வெளி மருந்தாக பிரயோகிப்பதில் பெரிதாக நன்மை கிடைப்பதில்லை. அதை உள்மருந்தாக எடுத்துக்கொள்ளும் போதுதான் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்…

Read More: மாதவிடாய் சீராக்கும் ”குமரி பக்குவம்” வீட்டிலேயே

 செய்வது எப்படி!

18 வகையான கற்றாழைகள் உள்ளன ஆனால் இன்றைய நிலையில், சோற்றுக்கற்றாழை, ரயில் கற்றாழை, நார்க் கற்றாழை ஆகிய மூன்று வகைகளைத்தான் மக்கள் அறிந்துள்ளனர். இவற்றில் நார்க்கற்றாழையை வேலிப்பயிராக பயண்படுத்துகிறார்கள். இதிலிருந்து நார் எடுத்துப் பலவிதங்களில் உபயோகப்படுத்துகிறார்கள். ரயில் தண்டவாளங்கள் அருகே சில இடங்களில் பெரிதாக வளர்ந்திருப்பவை ரயில் கற்றாழை, இத இரண்டு வகைகளும் அமெரிக்காவில் இருந்து 19, 20-ம் நூற்றாண்டுகளில் இங்குக் கொண்டுவரப்பட்டவை. தமில் மண்ணைத் தாயகமாகக் கொண்டது சோற்றுக்கற்றாழை.

இது சுமார் 3அடி உயரம் வரை வளரக்கூடியது. இதில் சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். மனித உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், போலிக் அமில, சுண்ணாம்பு, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், சிறியளவில் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

சூட்டை தணிக்கும்!

சித்த மருத்துவத்தில் நூற்றுக்கணக்கான தைலங்கள், லேகியங்கள், பற்பங்கல் ஆகியவை சோற்றுக்கற்றாழை கொண்டு செய்யப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையிலிருந்து எடுத்த சோற்றை (சோற்றுக்கற்றாழையில் தோலை சீவிய பகுதியைச் சோறு என்று அழைப்பர்) கழுவி அப்படியே சாப்பிட்டால் உடற்சூடு தணியும். ஆனால் குளிர்ச்சி உடம்பினர் இப்படி சாப்பிடுவது ஏற்புடையதல்ல. சோற்றுக்கற்றாழை, மாதவிடாய்க் கோளாறுகள், கருப்பைப் பலவீனம், குழந்தையின்மை ஆகிய மூன்று முக்கிய வியாதிகளுக்கு மருந்தாக விளங்குகிறது. அதோசு சூதகவாயுவை சீர்படுத்தி மோகச்சூடு மற்றும் மூலச்சூடு ஆகியவற்றைத் தன்னிலைப்படுத்தும் இயல்பு கொண்டதாகவும் இருக்கிறது.

Read More; அஸ்வகந்தா செக்ஸ் வாழ்க்கைக்கு எப்படி மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கிறது?

வந்த நோய்களை குணமாக்குவது மருந்து. நோய்கள் வராமல் காப்பது காயகற்பம். இந்தக் காயகற்ப முறைகள் சித்தர்கள் தமிழ்ச் சமூகத்துக்கு விட்டுச் சென்ற மாபெரும் அறிவுக்கொடை. அந்த வகையில் தேரான் என்னும் சித்தர் “வற்றாக்குமரி தன்னை வற்றலென் வுண்ணின்” எனத் தொடங்கும் பாடலில், கற்றாழையை உலர்த்தி உண்டுவர இளமையாகவும் வன்மையுடனும் நூறாண்டுகள் வாழலாம் என் எழுதியுள்ளார்.

நன்கு கழுவி எடுக்கப்பட்ட கற்றாழைச் சோற்றை 3 முதல 5கிராம் வரை திரிகடுக சூரனத்துடன் (சுக்கு மிளகு திப்புலி பொடிகள்) சேர்த்து நாட்டுச் சர்க்கரை, நெய் சேர்த்து பிசைந்து காலையில் மட்டும் 48 நாட்கள் உண்டு வந்தால் தோல் பிணிகள், மூலம், பெளத்திரம் ஆகியவை நிரந்தரமாக குணமாகும்.

Read More; காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்

 கற்றாழைச் சாறு!

மற்ற மூலிகைகளைப்போல தண்ணீர் சேர்த்து இடித்தோ, பிழிந்தோ கற்றாழையில் சாறு எடுக்க முடியாது. கற்றாழைச் சோறு வழவழப்பாக இருப்பதால், இடிபடாது. இதற்கென் சிறப்பான முறையைக் கையாண்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நன்றாக கழுவப்பட்ட கற்றாழைச் சோறுடன் சிறிது நெல் உமி சேர்த்துப் பிசைந்து ஒரு துணீயில் பொதிந்து கட்டித் தொங்கவிட்டு, கீழே ஒரு பாத்திரத்தை வைத்து விட்டால் 5 மணி நேரத்தில் சோற்றில் உள்ள சாறு முழுவதும் வடிந்துவிடும். உமிக்கு பதிலாக கடுக்கய்ப் பொடி அல்லது படிகாரப் பொடியும் சேர்க்கலாம். படிகாரப்பொடி சேர்த்துக் எடுக்கப்பட்ட கற்றாழைச் சோற்றை கண் வலியின் போது கண்களில் விட்டால் ஒரே நாளில் குணமாகும்.


அனைத்து இயற்கை மூலிகைகளையும் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டியவை. நம் பொதிகை இனையதளத்தில் ஆன்லைன் மூலம் எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம். தொடர்புக்கு 7200931131 / 9840494462



                www.podhigaiherbs.com

Saturday, April 23, 2022

கோடைக்கேற்ற இயற்கை மூலிகை குளிர்பானங்கள்

 


சிறிதும் இரக்கமின்றி அனலை கக்கும் சூரியனின் அக்கினிபார்வையால் வியர்வை தாகம் உடல்சோர்வு என பல பிரச்சனைகள் உடலை வாட்டி வதைக்கிறது இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள என்ன செய்யலாம்? (how to make summer drinks at home)

உடலை உருக்கும் வெயிலால் உடனடியாக இழந்த நீர்த்துவத்தை உடல் பெற்றிட கனிமச்சத்து நிறைந்த அற்புத மருந்து இளநீர். கோடையில் அடிக்கடி உலரும் தொண்டைக்கு குளிரூட்டுவதுடன் வாய்ப்புண், வயிற்றுப்புண் இவற்றையும் நீக்கும் ஆற்றல் இதற்க்கு உண்டு.

வைட்டமின்கள் பி1,பி6, பி12, விட்டமின் சி மற்றும் இரும்பு , பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து, பொட்டாசிய சத்து ஆகியவை அடங்கிய ஐஸோடானிக் கலவை இள நீர் மொத்தத்தில் கோடைகாலத்தில் இளநீர் உங்கள் சாஸ்ஸாக இருக்க வேண்டும்.

இளநீருக்கு அடுத்தப்படியாக கோடைக்கு ஏற்றது வெள்ளரிக்காய். கோடையில் உடல் நீர்த்துவம் வியர்வையால் அதிகம் வெளியேறும். அதனால் உண்டாகும் செறிவுற்ற சிறு நீர், கழிக்கும் போது எரிச்சலைத் தரும். நீர்க்கட்டு, சிறு நீரகக் கல் அதிகரிக்கும். இந் நேரத்தில் வெள்ளரி சிறு நீரைப் பெருக்கி கற்களை வெளியேற்றி எரிச்சலைக் குறைக்க உதவும். இதன் விதைகளை அரைத்து அடிவயிற்றில் பற்றிட நீர்க்கட்டு உடனே நீங்கும்.

இள நீரைப் போல  electrolyte  நிறைந்த குளிர்பானம் தர்ப்பூசனி தாகம் தணிப்பதுடன் மேக நோயில் வரும் வெள்ளைப் போக்கு சிறு நீர் எரிச்சல் இவற்றையும் நீக்கும். தர்பூசனி பெண்ணுக்கேற்ற குளிர்பானம்.

 நாம் குடிக்கும் தண்ணீர் சேகரித்து வைத்துள்ள கலத்த்தில் ( மண்பாண்டமாயிருத்தல் நன்று) வெட்டி வேரை துணியில் சிறு முடிச்சாக போட்டு ஊற வைக்க, அத்தண்ணீர் சுவை கூடுதலாயிருப்பதுடன் உடலுக்கும் குளிர்ச்சியைத் தரும்.

ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.  ஒரு டீஸ்பூன் குல்கந்துவை தண்ணீரில் கலந்து, அதனை குடிக்க வேண்டும். அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிட வேண்டும்.

அமிலத்தன்மை மற்றும் இதுதொடர்பான பிற பிரச்சினைகள் உள்ளவர்கள் பாலில் குல்கந்துவை சேர்த்து உட்கொள்ளலாம். சிறிது குளிர்ந்த பால் எடுத்து, ஒரு டீஸ்பூன் குல்கண்ட் சேர்த்து பருகுங்கள். இல்லையெனில் குல்கந்துவை வெறுமனே கூட சாப்பிடலாம். அல்லது வெத்தலையில் வைத்து மடித்து அதனை சாப்பிடலாம்.

 அக்கினிச்சூட்டின் காரனமாக உடல்சூடு அதிகரித்து சிறு நீர் வராமல் விழி பிதுங்கி அவதியுறும் இந்த அனல் காலத்தில் தடாலடியாகச் சூடு தனிய இன்ஸ்டண்ட் மூலிகை மருந்து “ பானாகாரம்” தான்.


தெற்கத்திக்காரருக்குப் பரிச்சயமான ”பானாகாரம்” செய்ய பனங்கருப்பட்டி, சிறுதுண்டுப் புளி குளிர்ந்த நீர் போதும். கருப்பட்டியையும் , புளியையும் நீரில் கரைத்து அரைக் குவலை அளவு பருக சிறு நீரின் காரத்தன்மை (Alkalinity ) உடனடியாகக் குறைந்து சூடு தனிந்து சிறு நீர் சிரமமில்லாமல் பிரியும்.

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | Karuppu Kavuni rice/ Black Rice benefits

கோடைக்கால உணவுக்கான சில டிப்ஸ்!

அதிக உப்பு மற்றும் உறைப்பு இல்லாத உணவு, எண்ணெய்ச் சத்து அதிகமில்லாது சமைத்த காய்கறி நல்லது. இனிப்பிற்கு பனங்கற்கண்டும் நேனும் சிறந்தது, பருகுவதற்கு கரும்புச்சாறு, மாதுளைச்சாறு நல்லது. உணவாக அரிச்யில் ஆக்கியவையே ஏற்றது. கோதுமை கண்டிப்பாக தவிர்க்கவும். கோடைக்காலத்தில் இரவில் அதிக நேரம் விழித்திருந்தாலும் கூட உடலுக்குக் கேடு. வீடுகளின் ஜன்னல் புறங்களில் வெட்டி வேர் (Coleus Vettiveroides Root)கீற்றுகளால் நெய்யப்பட்ட தட்டிகளைப் போடுதல் குழந்தைகளுக்கு வேனற் கட்டிகள் வராது தடுக்கும். 

Read more : ஆவாரையின் அற்புதங்கள்

தலையை சீவிய பின் கலைத்துப்போடுவதும், தலையில் எண்ணெய் வைத்தால் என் தலை என்ன சைனீஸ் ரெஸ்டாரெண்டா? எனச் சண்டைக்கு வரும் இளையத் தலைமுறையும் இப்போது அதிகம். உடலில் அதிகரிக்கும் பித்தச் சூடுதான் சாதாரன வாயுத்தொல்லை முதல் குழந்தைப் பேறின்மை (Infertility) வரை முக்கிய காரணம். எனவே, ஒள்வைப்பாட்டியின் அறிவுரைப் படி ”சனி நீராட” எண்ணெய்க் குளியலும், மற்ற ஆறு தினங்களிலும் தலைக்கு குளித்து, பின் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2, 3 மணி நேரமாவது தலையில் எண்ணெயுடன் இருப்பது முடிக்கும் நல்லது, உடலுக்கும் நல்லது.

Read More: தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...!

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டால் மேனியில் அம்மை, அக்கி, வேனல்கட்டி போன்ற துன்பங்கள் வர விடாமல் தடுப்பதோடு மட்டுமில்லாமல், ஆதவனின் அக்கினி பார்வையில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.   

Friday, February 11, 2022

ஆவாரையின் அற்புதங்கள்

 

பொங்கல் பண்டிகையின் போது வீடுகளுக்கு வெள்ளையடித்து காப்புக் கட்டுதல் என்ற சடங்கை நடத்துவது வழக்கம். ஆவாரை, கார்த்திகைப்பூ என்ற சிறுபீளை, வேப்பிலை இந்த மூன்று மூலிகைகளையும் ஒரு கொத்தாகக் கட்டி வீட்டு முற்றத்தில் செருகி வைப்பார்கள் ஏன் தெரியுமா? அதுதான் அந்த காலத்தில் முதலுதவிப் பெட்டி, ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு குணமுடையது. ஆபத்து நேரங்களில் அங்கிங்கு அலையாமல் சட்டென் எடுத்துப்பயன்படுத்தவே “ காப்புக் கட்டு” என்ற பெயரில் பழக்கப்படுத்தினார்கள். காலப்போக்கில் அது வெறும் சடன்காகிப் போனது. ”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ" என்ற மூத்தோர் சொல் எவ்வளவு சிறப்பான என்பதை ஆவாரையின் பலனை அனுபவித்தவர்களால் தான் உணர முடியும். சாதாரனமாக நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில், கைக்கெட்டும் தூரத்திலேயே ஆயிரக்கனக்கான் மூலிகைகள் இருக்கின்றன அந்த வகையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் நிறப் பூக்களுடன் பூத்து குலுங்குபவை தான் இந்த ஆவாரை. வறண்ட நிலத்தில் தான் வளர்ந்தாலும், மனிதர்களின் நோய்களைத் நீக்கி நோண்ட ஆயுளைக் கொடுக்கும் அற்புத மூலிகை ஆவாரை.



ஆவாரையின் மருத்துவப் பயன்கள் :

** ஆவாரைப் பட்டையை உலர்த்தித் தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த பின் வாய்க் கொப்பளிக்க ஈறு நோய்கள் விலகும்; பற்கள் பலம் பெறும்.

 ** இதையே உள்ளுக்குக் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல் தடுக்கப்படும்.

 ** ஆவாரை விதையைக் காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு, சிறிது நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வைக்க கண்களின் சிவந்த நிறம் நீங்கும். அத்துடன் கண் எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும்.

 ** ஆவாரை இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால் கோடை வெயிலில் பயணம் செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், வலிப்பு போன்றவை தவிர்க்கப்பெறும்.

 ** ஆவாரம்பூவைக் கூட்டாகவோ, கறியாகவோ சமைத்து சாப்பிட உடலின் கற்றாழை வாடை விலகிப் போகும்.

** ஆவாரைப் பஞ்சாங்கம் எனப்படும் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியன சேர்ந்த கலவையை சம அளவு எடுத்து, அதன் கலவையை 10 கிராம் அளவு காலையும் மாலையும் இருவேளை வெந்நீர் சேர்த்து உண்டு வந்தால் சரும நோய்கள், நாவறட்சி, அடங்காப்பசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் சோர்வு, மயக்கம், மூச்சு முட்டுதல் ஆகியன விரைந்து குணமாகும்.

 ** ஆவாரைச் செடியின் பிசின் சேகரித்து தினமும் இருவேளை குளிர் நீேராேடா அல்லது மோரோடோ பத்து கிராம் வரை குடித்து வர இருபாலருக்கும் ஏற்படும் வெள்ளைப்போக்கு குணமாகும். சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலும் விலகிப் போகும்.

 ** ஆவாரை பஞ்சாங்கம் வாங்கி குடிநீர் ஆகக் காய்ச்சி குடிநீரின் அளவுக்கு சரியளவு பனங்கற்கண்டு சேர்த்து வால்மிளகு, ஏலக்காய் இவற்றை போதிய அளவு உடன் சேர்த்து மணப்பாகாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினம் இருவேளை பால் அல்லது நீர் சேர்த்து பத்து மில்லி வரை சாப்பிட்டுவர இளைத்த உடல் பலம் பெறும். அதிக சிறுநீர் போவது மட்டுப்படும்.

** ஆவாரம் இலையை இடித்து தலை முதல் கால் வரையில் உடம்பில் ஊறும்படி ஓரிரு மணி நேரம் பூசி வைக்க வாதம் என்னும் வாயுத் துன்பம், உடலில் ஏற்பட்ட ரணம் ஆகிய அனைத்தும் போகும்.

 ** ஆவாரம் பூ, உலர்ந்த எலுமிச்சைத் தோல், பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து மெல்லிய பொடியாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, பன்னீர் சேர்த்து குழைத்து முகப்பூச்சாக பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தின் சரும சுருக்கம் ஆகியன விலகும். இதை உடலுக்குப் பூசிக் குளிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

 ** ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். புதிய ரத்தம் உற்பத்தி ஆகும்.

 ** ஆவாரம் இலையைக் காய வைத்து அன்றாடம் மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவுக் கால பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும்.

 ** ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும்.

** ஆவாரையின் வேரைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் 10 கிராம் அளவுக்கு தீநீர் இட்டுக் குடிக்க காய்ச்சல் எவ்வகையாக இருந்தாலும் அடங்கிப் போகும். அது மட்டுமின்றி சர்க்கரை நோயும் கட்டுக்கடங்கும்.

 **  ஆவாரம் பூவின் சூரணத்தை அந்தி சந்தி என இரண்டு வேளை பெண்கள் வேளைக்குப் 10 கிராம் வீதம் சாப்பிட்டு வர PCOD எனும் கர்ப்பப்பைக் கட்டிகள் கரையும்

** ஆவாரையைத் தேநீராக்கிக் குடித்து வருவதால் இரண்டாம் நிலைச் சர்க்கரை(Type 2) தவிர்க்கப்படும். ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் பயணத்தன்மையும்(Motility) அதிகரிக்கும். மது குடித்ததால் ஏற்பட்ட ஈரல் நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் மட்டுப்படும். சிறுநீர்த்தாரைத் தொற்றுகள் சீராகும்.

AD: *ஆவாரம் பூவில் செய்யப்பட்ட குளியள் சோப்: தரமான முறையில் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவது விற்பனையாகிவரும் பொதிகை ஹெர்பல்ஸின் ஆவாரம் பூ குளியல் சோப்பை பயன்படுத்திப்பாருங்கள் மாற்றத்தை உண்ர்வீர்கள்.










ஆவாரை நீர்:

இன்றைக்கு தேநீர் அருந்தாமல் நம்மால் இருக்க முடியவில்லை, அதனால் உடல் அரோக்கியத்துக்கு எந்த பலனும் இல்லை. பணம் செலவாவதுதான் மிச்சம். அதைவிட ருசியான, மிக மிக செலவு குறைந்த, அரோக்கியத்தை அள்ளித்தரும் ஆவாரை நீரைப் பருகிப்பாருங்கள பிறகு அதை மட்டும் தான் பருகுவீர்கள். கையளவு ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து அருந்தினால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், சரும  நோய்களும் குணமாகும்.

கிரீன் டி என்ற பெயரி இன்றைக்கு அதிகமாக விற்பனையாகும் தேநீரை விட ஆயிரம் மடஙு அற்புதமானது, ஆவாரை நீர் இது மட்டுமல்ல ஆவாரை இலையைப் பறித்து, கல்லில் வைத்து அரை குறையாகத் தட்டி தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, கண்களின் வழியே  வெளியேருவதை உணர முடியும். தலை முடி வலர, உடலனி மினுமினுப்பாக்க, உடல்துர்நாற்றத்தைத் துரத்த என் அனைத்துக்கும் ஆவாரை பயன்படுவதால் இதனை, சகல நோய் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்கிறார்கள். இவ்வளவு அற்புதங்களைச் செய்வதனால் தான் ”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” எனச் சொல்லி வைத்தார்களோ நம் முன்னோர்கள். 

இனியாவது ஆவாரையைஆதரிப்போம்.



சர்க்கரையின் அளவை சரிசெய்ய உதவும் பன்னீர் பூ !!

  சர்க்கரையின் அளவை சரிசெய்ய உதவும் பன்னீர் பூ !! பன்னீர் பூ பார்ப்பதற்கு சுண்டைக்காய் போல் இருக்கும் , இந்த பன்னீர் பூவான...